என் உலகம்

என் உலகம்
கனவுகளுடன் துளசி...

Friday, July 2, 2010

எனது டிஸ்னி வாழ்க்கை -3 (பிறந்த நாள் பரிசு )





அன்று காலையில் இருந்தே ஓயாமல் சிணுங்கி கொண்டு இருந்தது என் தொலை பேசி... நண்பர்களும், குடும்பத்தவர்களும் அழைத்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு இருந்தனர். முதல் நாள் இரவு என் வீடு புகுந்து பிறந்த நாள் கொண்டாடிய என் நண்பர்களின் அன்பை மூன்று முறை குளித்தும் தலையில் இருந்த கேக் இன் மனமும், என் வீட்டின் நிலமும் பறை சாட்டின.

அன்று பகலும் என் தொலைபேசி சிணுங்கல் நிற்க வில்லை. வகுப்பில் இருந்து நான் வெளிவந்த நான் வந்திருந்த வாழ்த்துகளை கேட்டு கொண்டு இருந்தேன், பிறந்த நாள் வாழ்த்துகளுடன் ஒரு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம், டிஸ்னி இல் வேலை பயிற்சிக்காக (Internship) அழைத்து இருந்தனர். உண்மையிலேயே குதூகலமான நாளாக மாறிவிட்டது. இன்று வரை கடவுள் தந்த பிறந்த நாள் பரிசாக இந்த வாய்பை நான் நோக்குகின்றேன்.

* * *

வெகு சீக்கிரம் நான் டிஸ்னி செல்லும் நாள் வந்து விட்டது, சஞ்சலம் கலந்த நம்பிகையுடன் நான் ஒர்லாண்டோ நோக்கி பறந்தேன்... வழமையாக நான் எங்கு சென்றாலும் விமான நிலையத்தில் எனக்காக யாராவது காத்திருப்பர். இம்முறை யாருமே இருக்கவில்லை, உலகை தனியாக எதிர்நோக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இரண்டு நாட்களுக்குள் நான் டிஸ்னி வாழ்க்கைக்குள் பிரவேசித்து விட்டேன் என்பதை என் சுற்றுசூழல் சொன்னது. வாழ்க்கை ஒரு பரிசு என்றால் தினமும் கொண்டாட்டமாக தானே இருக்க வேண்டும்? டிஸ்னி உலகத்தில் தினமும் கொண்டாட்டம் தான்...


முதல் முதலாக Cindrella இன் மாளிகையை கண்ட பொழுதை என்னால் இன்றும் மறக்க முடியாது... கதைகளிலும், கனவுகளிலும் கண்ட ஒரு உலகம் அங்கே விரிந்து இருந்தது. இது நிஜமா என்று நானே என்னை கிள்ளி பார்த்து கொண்டேன்... நான் கண்ட அதிசயங்களை நீங்களும் காண வேண்டாமா?

தொடந்து படியுங்கள்....

1 comment: